Padme
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் பத்மேவின் கறுப்புப் பணம் நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்படுகிறதா? – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

Share

பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே-வுடன் தொடர்புடைய தென்னிலங்கை நடிகைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பத்மேவைச் சந்தித்த தென்னிலங்கை நடிகை ஒருவர், அவரைத் திரைப்படத் தயாரிப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் கையடக்கத் தொலைபேசியில், துபாயில் தென்னிலங்கையின் நடிகைகள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

:இந்தப் புகைப்படங்களில் உள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த நடிகைகள் தொடர்பில் CID விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கெஹல்பத்தர பத்மேவின் கறுப்புப் பணம் (Black Money) குறித்த நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா (Money Laundering) என்பது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல தென்னிலங்கை நடிகைகள் இது தொடர்பில் தமது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் உள்ள பத்மேவிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...