china 1
செய்திகள்உலகம்

கொரோனாவால் முடங்கும் சீனா- மூன்றாவது பெரு நகருக்கு முழு ஊரடங்கு

Share

சீனாவின் 3வது நகரும் கொரோனாவால் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு பெரு நகருக்கும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

சீனாவின் லான்ஸோ நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள மக்கள் தொகை 40 லட்சம். இதுபோல மங்கோலிய பிராந்தியத்தில் உள்ள ஏஜின் நகரும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இன்று சீனாவின் ஹெயிலோக்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹெய்ஹே நகருக்கும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது .

இந் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 60 லட்சம். இந்த மாகாணம் ரஷ்யாவுடன் எல்லையில் உள்ளது.

ரஷ்யாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 159 பேர் சாவடைந்தும் உள்ளனர். 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்தும் தொற்று இந்த குறிப்பிட்ட மாகாணத்துக்குப் பரவியிருக்கலாம் என சீனா தெரிவித்துள்ளது.

இந்த மாகாணம் முழுவதும் பாதிக்கப்பட்டோருடன் தொடர்ப்பில் இருந்த 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம்...

1334083
உலகம்செய்திகள்

சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி...

image 1843c289c1
செய்திகள்இலங்கை

5 வயது சிறுமி சித்திரவதை: தாயின் கள்ளக்காதலன் கொடூரம்! – சந்தேக நபர் தலைமறைவு!

மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் 23 வயது பெண்ணின் 5 வயது...

24 671602c72b24d.webp
செய்திகள்இந்தியா

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 38ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: 68 பேருக்கு அஞ்சலி!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில்  சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 38வது நினைவு தினம் இன்று (அக்...