வடக்கில் மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா!

3e687ce8 35e823a1 chinasl

சீனா வடக்கிலுள்ள தீவுகளில் முன்னெடுக்க இருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது. வடக்கில் நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் இச்செயற்றிட்டத்தை ஆரம்பிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sino Soar Hybrid Technology என்ற சீன நிறுவனம் பாதுகாப்பு தொடர்பாக மூன்றாம் தரப்பு முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்டே இச்செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இலங்கையில் மின்னுற்பத்தி திட்டத்தை கைவிட்ட சீன நிறுவனம் கடந்த 29 ஆம் திகதி மாலைத்தீவிலுள்ள 12 தீவுகளில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இச்செயற்றிட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, இச்செயற்றிட்டம் தொடர்பாக விழிப்புடன் இருப்பதாக இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Exit mobile version