குளத்தில் மூழ்கிய கார்- 4 பேர் சாவு

photo4jpg

nepal

நேபாளத்தில் கார் குளத்தில் மூழ்கி 4பேர் சாவடைந்துள்ளனர்.

நேபாளத்தின் ரவுதகத் மாவட்டம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கவுர்-சந்திராபூர் வீதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேதி யோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த 4 பேரும் சாவடைந்துள்ளனர் .

சாவடைந்தவர்கள் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினாநாத் (25), அருண் (30), திலிப் (28), அமித் (27) என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் இந்தியர்கள் சாவடைந்ததை குறித்து ரவுதகத் காவல்துறை இந்திய காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தது.

அதன்பின்னர் சாவடைந்த உறவினர்கள் இன்று காலையில் வந்து உடல்களை அடையாளம் காட்டினர். குளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது.

விபத்து குறித்து நேபாள பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

#india

Exit mobile version