car 2
செய்திகள்உலகம்

தீவிரவாதிகளால் இங்கிலாந்தில் கார் குண்டுத்தாக்குதல்!

Share

இங்கிலாந்தில் தீவிரவாதிகளால் கார் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ளது லிவர்பூல் நகரதிலுள்ள பெண்கள் வைத்தியசாலைக்கு அருகே நேற்று வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அதில் சாரதியும் , ஒரு பயணியும் இருந்தனர்.

கார் நின்ற சில விநாடி அதில் இருந்து குண்டு வெடித்தது.

இதில் கார் முழுமையாகச் சிதறியது.

காரில் இருந்த பயணி அந்த இடத்திலேயேசாவடைந்தார் .

காரின் சாரதி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர் .

அவர் மோசமான நிலையில் இருந்து தப்பித்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.

அதையடுத்து அங்கு பொலிஸாரும்,இராணுவமும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குண்டு வைத்த தீவிரவாதிகள் வைத்தியசாலையிலிருந்து இருந்து 1 கி.மீட்டர் தூரம் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது பொலிஸாருக்கு தகவல் வந்ததை அடுத்து அங்கிருந்த 3 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

கார் குண்டு தாக்குதலில் சாவடைந்தவர் பற்றிய விவரம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதால் இங்கிலாந்து முழுவதும் சோதனைகள் இடம்பெற்று வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....