Diana Gamage 1
செய்திகள்அரசியல்இலங்கை

கஞ்சா செய்கை மேற்கொண்டால் கடன் பெறவேண்டிய தேவை இல்லை!! – மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய டயானா கமகே

Share

கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, மீண்டும் கஞ்சா பற்றி கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கஞ்சா செய்கையின் மூலம் நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும், ஏற்றுமதிமூலம் இதனை செய்யலாம் எனவும் அரசுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

” கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...