புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்
செய்திகள்இலங்கை

புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

Share

புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினால் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும், எனவே புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியம் என புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் சச்சினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படும், மீண்டும் ஒரு நோய் ஏற்படும்போது அதனை எதிர்த்து போராடுவது கடினமாக காணப்படும். எனவே இவர்கள் தமக்குரிய மருந்துகளை தொடர்ச்சியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு வெளியிடங்களுக்கு செல்லாமல் அதே பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் எனில் பிரதேசத்திலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் பதிவுசெய்து நடமாடும் சேவையினூடாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...

14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...