விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு என்னால் முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு இராணுவத்தினரைக் கொண்டு பலத்தைப் பயன்படுத்துவதற்கு தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் நான் அப்படி இல்லை என்றார்.
இருப்பினும் தான் அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பாரிய பரிவாரங்களுடன் பயணம் செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக தெரிவித்தார்.
#SrilankaNews