Caldor Fire b
செய்திகள்உலகம்

கலிபோர்னியா கால்டோரில் தீ – தஹோ ஏரி வெறிச்சோடியது

Share

வடக்கு கலிபோர்னியாவின் தாஹோ ஏரி கரையில் இருந்து பெரும் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கால்டோர் தீயால் ஏற்கனவே ஒரு லட்சத்து 91 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்துவிட்டது. இந்நிலையில் வெறும் 16 வீதமேயான தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

caldor fire

இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த தீயை அணைக்க 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அங்குள்ள நோயாளிகள் இப்பகுதியில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீயால் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமடைந்திருக்கலாம் அல்லது அழிவடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் வெப்பமான மற்றும் வறண்ட நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் வெப்பநிலை அதிகரித்து காட்டுது தீ ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

தொழில்துறை சகாப்தம் தொடங்கியதிலிருந்து உலகம் ஏற்கனவே சுமார் 1.2C வெப்பமடைந்துள்ளது. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின், வெப்பநிலை உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்ல இன்னும் வாய்ப்புக்கள் அதிகம் என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...