articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
செய்திகள்இலங்கை

360 மில்லியனுக்கு 3 மில்லியன் விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

Share

மனிதப் பயன்பாட்டிற்காக ரூபாய் 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5 ml/1 ml) கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் இலங்கையில் ரேபிஸ் (Rabies) நோயைத் தடுப்பதற்கும், இந்நோய்க்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளன.

கொள்முதல் செயல்முறைக்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டதில், 6 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு (High-Level Standing Procurement Committee) மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் (Procurement Appeal Board) விதந்துரைக்கமைய, குறைந்த விலைமனுதாரரான Citihealth Imports (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகளின் உற்பத்தியாளர் Serum Institute of India Pvt Ltd, இந்தியா ஆகும். இந்த ஒப்பந்தம் ரூ. 360 மில்லியன் தொகைக்கு (பெறுமதிசேர் வரியில்லாமல்) வழங்குவதற்குச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...