28 5
செய்திகள்

தரமற்ற மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் தகவல்

Share

தரமற்ற மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் தகவல்

இலங்கை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 51 மருந்துகள், தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

இந்த தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 27 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, 07 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, ஏனையவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

இந்தநிலையில் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டுள்ளன அல்லது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2017 முதல் இறக்குமதி மருந்துகளில் மொத்தம் 600 தரக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில் 96 தரக்குறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 2022 இல் 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்தன.

இதற்கிடையில் 2023 இல் மருந்துகளின் தரக்குறைப்பாடுகள், நாட்டில் உயிரிழப்புக்கள் உட்பட்ட சம்பவங்களுக்கு காரணம் என்று கண்டறியப்பட்டிருந்தன.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...