29 2
இலங்கைசெய்திகள்

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்

Share

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்களான சனத் நிஷாந்த மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இதுவரையில் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இரு அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களும் தற்போது குறித்த இல்லத்திலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்திருந்தார்.

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் முன்னாள் அமைச்சர்களுக்கு ஆட்சிக்காலத்தில் அரசினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பயன்படுத்திய கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை அமைச்சரவை மீண்டும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...