tr
செய்திகள்உலகம்

அகதிகள் நுழைவதைத் தடுக்க பிரித்தானியாவின் புதிய திட்டம்!

Share

அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு பிரித்தானியா புதிய திட்டமென்றை பிரான்சிடம் தெரிவித்துள்ளது.

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, பிரித்தானிய காவல்துறை பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.

அத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிராகரித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அகதிகள் வருவதை தடுக்க பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகையான நிதி கொடுத்தும் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை கூடியவறே உள்ளதென பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் கூறியுள்ளார்.

ஆனால், அத்திட்டம் தமது இறையாண்மையை மீறும் என பிரான்ஸ் நிராகரித்துவிட்டதாக பிரீத்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் , பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் காவல்துறை இணைந்து ஆங்கிலக் கால்வாயில் ரோந்து செல்லும் ஒரு திட்டம் தொடர்பில் இன்னும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...