Tractor
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உழவு இயந்திரத்திலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!

Share

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவன் (வயது-5) உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது – 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த பகுதியில் காணப்படும் காணி உழவு இயந்திரத்தால் பண்படுத்தபட்டுள்ளது. அதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி காணி உரிமையாளரின் மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தை பண்படுத்தியுள்ளார்.

Tractor

இந்தநிலையில், சிறுவர்களில் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளான்.

சிறுவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னாடியே உயிரிழந்து விட்டான் என
வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...