வலி. வடக்கு பிரதேச சபை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிளில் பயணம்!

Share

நாட்டின் பொருளாதாரச் சுமையை வெளிப்படுத்தும் முகமாகவும், எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும் நாளை புதன்கிழமை வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிளில் சபை அமர்வுக்குச் செல்லவுள்ளனர்.

வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் கட்சி பேதமின்றி காலை 9 மணிக்கு வலி. வடக்கு ஆரம்பிக்கும் இடமாகிய சுன்னாகம் திருஞானசம்பந்தா வித்தியாலயத்தில் இருந்து சைக்கிள் பேரணி ஆரம்பமாகி, கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள பிரதேச சபைத் தலைமையகத்தைச் சென்றடைந்து, 9.30 மணிக்கு பிரதேச சபையின் மார்ச் மாத அமர்வு நடைபெறும்.

நாட்டில் பொருள்களின் விலை எகிறல், பொருளாதார சுமை, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற வாழ்க்கைச்சுமையை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இதனைக் கண்டித்து, வலி. வடக்கு பிரதேச மக்களின் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த மக்கள் சார்பாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் பேரணியை மேற்கொள்ளவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...