பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பியவர் பாவேந்தர் பாரதிதாசன். பெரியாரால், சிந்தை இனிக்கும் செந்தமிழ் கவிஞராகப் போற்றப்பட்டார். தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்தநாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், வீரமணி அருமையான கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு வைத்தார்.
யாரும் கேட்காமலேயே பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் ஆகவும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வரலாறு படைத்த முதலமைச்சர், வீரமணியின் கோரிக்கையை ஏற்று, பாரதிதாசன் பிறந்தநாளை (ஏப்ரல் 29ஆம் திகதி) கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்… இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது” – என்று குறிப்பிட்டுள்ளார்.
#IndianNews
Leave a comment