கனடாவில் இளம்பெண் ஒருவரிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரான கனடா – மிசிசாகா நகரை சேர்ந்த 49 வயதுடைய ஹாசன் அல்சோகி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பிய பெண் ஒருவர் கடந்த 11ஆம் திகதி, பயிற்சிக்காக சென்றபோது, குறித்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டதாக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
குறித்த பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைய விசாரனையினை மேற்கொண்ட பொலிஸார், வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை குற்றவாளி எதிர்வரும் மார்ச் மாதம் பிரம்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
#World