saF 1
செய்திகள்உலகம்

வாகன பயிற்றுவிப்பாளர்களிடம் இளம்பெண்கள் கவனமாக இருங்கள்!!

Share

கனடாவில் இளம்பெண் ஒருவரிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரான கனடா – மிசிசாகா நகரை சேர்ந்த 49 வயதுடைய ஹாசன் அல்சோகி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பிய பெண் ஒருவர் கடந்த 11ஆம் திகதி, பயிற்சிக்காக சென்றபோது, குறித்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டதாக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைய விசாரனையினை மேற்கொண்ட பொலிஸார், வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குற்றவாளி எதிர்வரும் மார்ச் மாதம் பிரம்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

#World

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...