b7vbk6bo sheikh hasina
செய்திகள்உலகம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வங்கதேசம் இன்டர்போல் உதவியை நாடுகிறது!

Share

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து அழைத்து வருவதற்காக, பங்களாதேஷ் அரசாங்கம் இன்டர்போலின் (Interpol) உதவியை நாட ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தை இழந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி, தற்போது இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal) ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

தற்போது இந்தியாவில் அடைக்கலமாகி உள்ள ஷேக் ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பங்களாதேஷ் வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஹசீனாவை அழைத்து வருவதற்காக இன்டர்போல் உதவியை நாட பங்களாதேஷ் தீர்மானித்துள்ளதுடன், பூர்வாங்கப் பணிகளையும் அந்நாடு தொடங்கியுள்ளது.

ஹசீனாவைக் கைதுசெய்யுமாறு பிடியாணையுடன் (Arrest Warrant) இன்டர்போலுக்கு ஏற்கனவே ஒரு விண்ணப்பம் பங்களாதேஷ் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிடியாணை விவகாரம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர ரீதியில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...