kai
செய்திகள்இலங்கை

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடை! – உச்சகட்ட ஆலோசனையில் பிரித்தானியா

Share

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்த ஆலோசனைகள் இடம்பெறுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான விடயங்களில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட ஏனைய நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் வைத்து கருத்துரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரித்தானியாவின் சர்வதேச மனித உரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்துவருகின்றது.

எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவைப் பின்பற்றி இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தக் குற்ற தடைகளை விதிப்பதற்கு பிரித்தானியாவிற்கு. மேலும் என்ன ஆதாரங்கள் வேண்டும் என தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் கேள்வி எழுப்பிய வேளையே அமன்டா மில்லிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான முதன்மை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரித்தானிய மனித உரிமை ஆணையகத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது என இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...