jaffna 720x375 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கு தடை உத்தரவு!

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாவீரர் நாள் நிகழ்வுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த விண்ணப்பத்துக்கு, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், அவர்களுக்கான நீதிமன்ற தடையுத்தரவு இன்று அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதன்படி. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற தடையுத்தரவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை, தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்தில் கொண்டு, நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பொது இடத்தில், பொதுமக்களை ஒன்றுகூட்டியோ அல்லது தனிநபர் மூலமோ நடாத்துவதற்கு 15ம் இலக்க குற்றவியல் சட்டத்தின் பிரகாரம்
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக சூழலில் மாவீரர் நாள் நிகழ்வு அனுஷ்டிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...