Investigation
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பம்பலப்பிட்டி – உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதை! – விசாரணையில் அம்பலம்

Share

பம்பலப்பிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் அண்மையில் ஏழு மாடி கட்டடத்திலிருந்து மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதைப்பொருள் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே சிறுவனின் உடலில் மெத் ஆம்பெடமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

நீதிமன்ற இலக்கம் 3 நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி ராகுல் ஹக் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

மார்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ராஜா அபிலாஷ் என்ற சர்வதேச பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...