Investigation
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பம்பலப்பிட்டி – உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதை! – விசாரணையில் அம்பலம்

Share

பம்பலப்பிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் அண்மையில் ஏழு மாடி கட்டடத்திலிருந்து மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதைப்பொருள் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே சிறுவனின் உடலில் மெத் ஆம்பெடமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

நீதிமன்ற இலக்கம் 3 நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி ராகுல் ஹக் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

மார்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ராஜா அபிலாஷ் என்ற சர்வதேச பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...