15 8
இந்தியாசெய்திகள்

நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் மாத்திரமே இந்திய அணியில் இடம்: முன்னாள் வீரரின் ஆதங்கம்

Share

நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் மாத்திரமே இந்திய அணியில் இடம்: முன்னாள் வீரரின் ஆதங்கம்

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் (Badrinath) கடுமையாக விமர்சித்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) உட்பட்ட சில முக்கிய வீரர்கள் இந்த தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் மேற்க்ணடவாறு விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் , “ருதுராஜ் உட்பட சில வீரர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் போதெல்லாம் தன் திறமையை நிரூபித்திருக்கின்றனர்.

குறித்த வீரர்கள் சிறப்பாக விளையாடியும் அணியில் தெரிவு செய்யப்படாமை ஏன்?

இந்த மாதிரியான சூழலில் இந்திய வீரர்கள், இரண்டு மூன்று பொலிவுட் நடிகைகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். உடம்பு முழுக்க பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும், அதனால் எந்த நேரமும் செய்திகளில் இடம்பிடிக்கலாம்.

அப்படி இருந்தால் தான் இந்திய அணியிலும் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள் என்று நான் நினைக்கின்றேன்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்ரிநாத்தின் இந்த கடுமையான விமர்சனம் சமூகவலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நன்றாக விளையாடி கொண்டிருக்கும் வீரர்கள் ஏன் நீக்கப்படுகிறார்கள் என ரசிகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சம்சன், அபிசேக் சர்மா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சேர்க்கபடாதது குறித்தும் சரமாரி கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் இந்த முதல் தொடரிலேயே பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

அவர் வேண்டுமென்றே நன்றாக விளையாடும் வீரர்களை புறக்கணித்து என்ன சாதிக்க போகிறார் என்று தெரியவில்லை என்றும் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த கேள்விகளுக்கு கம்பீர் இன்று பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...