ToddlerFeet750
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து குழந்தை மரணம் !

Share

ஒரு வருடமும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று முன்தினம் (30) ஊவா வெல்லஸ்ச, கோணகங்கார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையை வீட்டுக்குள் நித்திரையாக்கிவிட்டு தாயும் தந்தையும் தோட்ட வேலைக்குசென்று, இடையிடையே தாயும் தந்தையும் மாறி மாறி உறங்கும் குழந்தையைப் பார்த்துச் சென்றுள்ளனர்.

மதியம் ஒரு மணியளவில் வந்து பார்த்த போது குழந்தை உறங்கிய இடத்தில் காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிய போது குழந்தைதண்ணீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சிசுவின் பிரேத பரிசோதனை நேற்று (31) மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோணகங்கார பொறுப்பதிகாரி எல்.டி. சதீஷ்குமார மேற்கொண்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...