ec
செய்திகள்இலங்கை

அசாத் சாலி, ரங்காவின் கட்சிகளுக்கு ஆப்பு!!

Share

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவின் பிரஜைகள் முன்னணி மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையின் படி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்கவினால் இது தொடர்பிலான 2263/22 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21ஆம் திகதி வெளியிட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய – பிரஜைகள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய, எக்சத் லங்கா மகா சபா கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை போன்றன காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 13
செய்திகள்இலங்கை

நடிகர் விஜய் தனது விருப்பமான நடிகர்: இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026-ல் நாமல் ராஜபக்ஷ கருத்து

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு...

16 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 968 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளின்...

15 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள்: 6 ஆவது கடன் தவணைக்கான மீளாய்வு ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

14 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரந்தகஹமுல களஞ்சியசாலையைத் திறந்த அரசு: அரிசி விலை உயர்வுக்குத் தீர்வு!

இலங்கையின் அரிசி விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மரந்தகஹமுல (Marandagahamula) களஞ்சியத் தொகுதியை, 13...