DSC 8266
செய்திகள்இலங்கை

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறையில் பரபரப்பு: உணவுத் தட்டில் மறைக்கப்பட்ட கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Share

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த கைதி ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர், தெவுந்தர விஷ்ணு தேவாலயத்துக்கு அருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சகோதரன் ஆவார்.

சிறைச்சாலையில் உள்ள உணவுத் தட்டில் (Food Plate) மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் உடனடியாகத் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது இந்தக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...