Arrested 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உண்டியல் மூலமாக போலி யூரோ நாணயத்தாளை, மாற்றும் முயற்சி முறியடிப்பு!-

Share

ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான போலி நாணயத்தாளுடன் இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளை தேடுதலின்போதே
குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான ஆணும், 45 வயதான பெண்ணும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் உண்டியல் மூலமாக இந்த போலி யூரோ நாணயத்தாளை, இலங்கை நாணயமாக வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் இயங்கும் பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மூலம் இந்த போலி யூரோ நாணயத்தாள் பெறப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...