Untitled 1 19 scaled
இந்தியாசெய்திகள்

எலும்பும் தோலுமாக அரிக்கொம்பன் யானை!

Share

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் வைரலானது.

தினமும் யானை சாப்பிடும் உணவு மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

உடல் மெலிவடைய காரணம் புதிய சீதோஷ்ண நிலை மற்றும் உணவு காரணமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறுகையில், அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இருக்கிறது.

முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உப்புசமாக இருக்கலாம், ஆனால் தற்போது காட்டு உணவுகள் மற்றும் புல் வகைகளை சாப்பிட்டு வருகிறது.

தற்போது தான் வனவிலங்குகளுக்கு உரித்தான தோற்றத்தில் மாறிக்கொண்டிருக்கிறது, மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வருகிறது.

யானைக்கு பிடித்த உணவுகள் கிடைக்காததால் மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி எடுத்தது, ஆனா் தீக்கு பயப்படும் என்பதால் வனத்துறையினர் தீயை வைத்து காட்டுக்குள் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...