இந்தியாசெய்திகள்

எலும்பும் தோலுமாக அரிக்கொம்பன் யானை!

Untitled 1 19 scaled
Share

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் வைரலானது.

தினமும் யானை சாப்பிடும் உணவு மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

உடல் மெலிவடைய காரணம் புதிய சீதோஷ்ண நிலை மற்றும் உணவு காரணமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறுகையில், அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இருக்கிறது.

முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உப்புசமாக இருக்கலாம், ஆனால் தற்போது காட்டு உணவுகள் மற்றும் புல் வகைகளை சாப்பிட்டு வருகிறது.

தற்போது தான் வனவிலங்குகளுக்கு உரித்தான தோற்றத்தில் மாறிக்கொண்டிருக்கிறது, மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வருகிறது.

யானைக்கு பிடித்த உணவுகள் கிடைக்காததால் மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி எடுத்தது, ஆனா் தீக்கு பயப்படும் என்பதால் வனத்துறையினர் தீயை வைத்து காட்டுக்குள் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...