bus
செய்திகள்அரசியல்இலங்கை

அதிகரிக்கிறதா பேருந்துக் கட்டணங்கள்..?

Share

எரிபொருள் கட்டணத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்தால், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்து தொழிலை நடத்துவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். எரிபொருள் விலை எவ்வளவு உயரும்? அந்த விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவோம் எனவும் அதற்கு வேறு மாற்றுவழி எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்து தொழில் இன்று ஸ்தம்பித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

டயர்கள் விலை அதிகம். மேலும், பேருந்துகளில் வேலை செய்ய ஊழியர்கள் இல்லை. லீசிங் கட்டுவதே கடினமாக உள்ளது எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....