Anura
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வகட்சி மாநாடுகளால் எவ்வித பயனும் இருக்காது- கூறுகிறார் அநுரகுமார

Share

” அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நடத்தப்படும் சர்வகட்சி மாநாடுகளில் எவ்வித பயனும் இருக்காது. எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இது விடயத்தில் ஜே.வி.பி. உறுதியான முடிவை எடுக்கும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்வரும் 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு இடம்பெற உள்ளதெனவும், அதில் பங்கேற்குமாறும் எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந் நாட்டில் இதற்கு முன்னரும் சர்வக்கட்சி மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. தேநீர் அருந்துவதற்காகவும், ஒன்றாக இருந்து அரட்டை அடிப்பதற்காகவுமே அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. உரிய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே, இம்முறை மாநாட்டுக்கு முன்னர் தரவுகள், தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். இம்மாநாட்டில் உண்மையான நல்ல நோக்கம் உள்ளதா என்பதை ஆராய்ந்துவருகின்றோம். உரிய தகவல்கள் கிடைப்பில் நாமும் பங்கேற்று, யோசனைகளை முன்வைப்போம்.” – என்றார் அநுர.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...