Anura
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வகட்சி மாநாடுகளால் எவ்வித பயனும் இருக்காது- கூறுகிறார் அநுரகுமார

Share

” அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நடத்தப்படும் சர்வகட்சி மாநாடுகளில் எவ்வித பயனும் இருக்காது. எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இது விடயத்தில் ஜே.வி.பி. உறுதியான முடிவை எடுக்கும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்வரும் 23 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு இடம்பெற உள்ளதெனவும், அதில் பங்கேற்குமாறும் எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந் நாட்டில் இதற்கு முன்னரும் சர்வக்கட்சி மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. தேநீர் அருந்துவதற்காகவும், ஒன்றாக இருந்து அரட்டை அடிப்பதற்காகவுமே அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. உரிய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே, இம்முறை மாநாட்டுக்கு முன்னர் தரவுகள், தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். இம்மாநாட்டில் உண்மையான நல்ல நோக்கம் உள்ளதா என்பதை ஆராய்ந்துவருகின்றோம். உரிய தகவல்கள் கிடைப்பில் நாமும் பங்கேற்று, யோசனைகளை முன்வைப்போம்.” – என்றார் அநுர.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...