gover
செய்திகள்அரசியல்இலங்கை

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

Share

அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இலங்கையில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 450 அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

6 லட்சத்து 66 ஆயிரத்து 480 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும். சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகமாக 1000 ரூபா வழங்கப்படும். அவர்கள் தற்போது 3 ஆயிரத்து 500 ரூபாவை மாதாந்தம் பெறுகின்றனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் மாதாந்தம் 15 கிலோ கோதுமைமா மானிய நிலையில் வழங்கப்படும். ஒரு கிலோவுக்கு 40 ரூபா குறைக்கப்பட்டு, கிலோ 80 ரூபா வீதம் வழங்கப்படும்.

புதிதாக எந்த வரியையும் அறவிடமாட்டோம்.” – என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...