கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக சுகப்படுத்துவதற்கு அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ தயாரித்த ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் கொண்டள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பல மருந்துகளை உருவாக்கி வருகின்றன.
எனினும் ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை ஆபத்தானது அல்லது எனவும் மருத்துவரின் பரிந்துரைப்படி வீட்டிலேயே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த மருந்துகள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருத்துவமனைகளிலேயே வழங்கப்படுகின்றது.
மூன்றாம் தர மருத்துவ பரிசோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி இந்த நிறுவனம் அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த இரு வாரங்களில் இந்த மாத்திரை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
Leave a comment