549229
செய்திகள்இலங்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனையில் நாளை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

Share

இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடுமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி, கல்முனை மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள மாட்டிறைச்சி கடைகள், கோழியிறைச்சி கடைகள், ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்

மாநகர சபையின் இந்த அறிவிப்பை மீறிச் செயற்படும் விற்பனை நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...