1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

Share

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்த ‘ஏர் ஏசியா’ (AirAsia) விமான சேவைக்குச் சொந்தமான ஒரு விமானம் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று இரவு 9.50 மணிக்கு இலங்கையை வந்தடையவிருந்தது. நாட்டிற்கு வரவிருந்த ஒரே ஒரு விமானம் மட்டுமே இதுவரை திருப்பி விடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாகக் கட்டுநாயக்கவுக்கு வரவிருக்கும் விமானங்கள் தரையிறங்க முடியாத அவசர நிலை ஏற்பட்டால், அந்த விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கும் திருப்பி அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று மாலை தெரிவித்திருந்தார்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்படியே ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...