makeshan
செய்திகள்இலங்கை

போதியளவு எரிபொருள் கையிருப்பில்! – யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன்

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மக்களுக்கு தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்ற எண்ணத்தில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் 14 சதவீத பெற்றோல் மற்றும் 29 சதவீத டீசல் தேவைகளை மட்டுமே நிறைவு செய்கிறது. எனவே இந்த எரிபொருள் நிரப்பு நிலைய பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது” என்றார்.

காங்கேசன்துறை தொட்டியில் பெற்றோல் 92 ஒக்ரைன் – 155 ஆயிரம் லீற்றர், டீசல் – 2,600,000 லீற்றர்
மண்ணெண்ணெய்- 165,000 லீற்றர் நாளைய தினம் வழங்கப்படவுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 696f67e3b313d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை மீளாரம்பம்: நோயாளிகளின் நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த CT ஸ்கேன் (CT Scan)...

24 65bb6658d1f06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 வரை வருமானம்: 2026 பட்ஜெட் நிவாரணங்களுக்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு...

Archuna 1
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி வடக்கில் சுதந்திரமாக நடக்க மகிந்தவே காரணம்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி அதிரடிப் பேச்சு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்தில் சுதந்திரமாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே...

MediaFile 7 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் இன்று நாட்டின் அதிகூடிய வெப்பநிலை பதிவு!

இன்று (20) நாட்டின் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று மதிய...