tamilni 240 scaled
இந்தியாசெய்திகள்

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? நடிகை குஷ்பு

Share

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? நடிகை குஷ்பு

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்று நடிகை குஷ்பு சர்ச்சையாக பேசியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “பெண்களுக்கு ரூ.1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? தமிழ்நாட்டில் 3500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் ஆள் தானே? அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்.

இந்த விவகாரத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தாய்மார்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை” என்றார்.

முன்னதாக பேசிய அவர், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளனர். திமுகவில் பிரச்சாரம் செய்ய யாரும் இல்லை. அதனால், கமல் ஹாசன் போன்ற முகம் திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய தேவை” என்றார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...