Rights to Information
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை!

Share

கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, இவ்வாறான மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி யாழ்.மாவட்டத்தை மையமாக வைத்து மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் ஆரம்பமானது.

இன்னும் சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தகவல்களை வழங்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதிகளவான மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையிலான மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...