Police Curfew
செய்திகள்இலங்கை

மேல் மாகாணத்தில் தொடரும் அதிரடி! – விசேட நடவடிக்கையில் பொலிஸார்

Share

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று காலை 6 மணி தொடக்கம் – மாலை 6 மணி வரை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசேட நடவடிக்கையில், பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றில் பயணித்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, முகக்கவசம் அந்நியமாய் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத
சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக, முகக்கவசம் அணியாத 4 ஆயிரத்து 351 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், முறையாக முகக்கவசம் அணியாத 9 ஆயிரத்து 658 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...