Namal Rajapakse gossip
செய்திகள்இலங்கை

பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!!

Share

பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!!

பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு சிறப்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவற்றை நிவர்த்திசெய்யும் முகமாக முதற்கட்டமாக வலய பாடசாலைகளை இணைத்து ,கல்வி மத்திய நிலையம் ஒன்றில் இணைய கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனை ஆயிரம் பாடசாலை இணைய இணைப்பு என்ற எண்ணிக்கையில் முன்நகர்த்த தீமானித்துள்ளோம்.

மாணவர்களின் பாடசாலை நூல்களை இணையத்தில் குரல்வழி பாடமாக பதிவேற்றி செய்மதி தொழில் ஊடாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அதிவேக இணைய வசதியுடன் கூடிய கற்றல் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கல்வி அலைவரிசை ஊடாக,நேரசூசி அடிப்படையில் தொலைக்காட்சியில் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கல்வி நடவடிக்கை சென்றடையும் வாய்ப்பை உருவாக்குவோம் – எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...