sajith
செய்திகள்இலங்கை

தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்!

Share

தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்!

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை எனில், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் கோத்தாபய தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குறித்த பதிவில் மேலும் உள்ளதாவது,

நாட்டில் வர்த்தக நிலையங்களிலும், சதொச நிலையங்களிலும் பொருள்களுக்காக மக்கள் வரிசையில் நிக்கின்றனர். எங்கு பார்த்தாலும் பொருள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விலை குறைத்து வழங்குவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு தற்போது பொய்யர்கள் ஆகியுள்ளது.

எமது நாட்டில் என்ன நடக்கின்றது? அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுங்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி வேண்டுங்கள். இதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

நாடு உடைந்து விழுவதை பார்த்துக்கொண்டு, அரச பலத்தை பெற்றுக்கொள்ள எமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அபிவிருத்தியடைந்த, சௌபாக்கியமான ஒரு நாடு, நாடு அபிவிருத்தி அடையும் ஒரு யுகம் தான் எமக்கும் தேவை.

இந்த நாட்டை கட்டியெழுப்ப, மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த, மக்களை வாழ வைக்க எங்களுக்கு முடியும்.

இவற்றை கருத்தில் கொண்டு, நான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, மக்கள் நலன் கருதி பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

உங்களுக்கு இந்த நாட்டை சரியான முறையில் ஆட்சிசெய்ய முடியாவிட்டால், நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கமுடியாவிட்டால், உங்களால் உருவான பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடிய விட்டால், அதனை ஏற்றுக்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் சந்தர்ப்பத்தை எங்களுக்கு தாருங்கள் என இந்த அரசாங்கத்திடம் தெளிவாக ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...