sajith
செய்திகள்இலங்கை

தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்!

Share

தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்!

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை எனில், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் கோத்தாபய தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குறித்த பதிவில் மேலும் உள்ளதாவது,

நாட்டில் வர்த்தக நிலையங்களிலும், சதொச நிலையங்களிலும் பொருள்களுக்காக மக்கள் வரிசையில் நிக்கின்றனர். எங்கு பார்த்தாலும் பொருள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விலை குறைத்து வழங்குவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு தற்போது பொய்யர்கள் ஆகியுள்ளது.

எமது நாட்டில் என்ன நடக்கின்றது? அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுங்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி வேண்டுங்கள். இதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

நாடு உடைந்து விழுவதை பார்த்துக்கொண்டு, அரச பலத்தை பெற்றுக்கொள்ள எமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அபிவிருத்தியடைந்த, சௌபாக்கியமான ஒரு நாடு, நாடு அபிவிருத்தி அடையும் ஒரு யுகம் தான் எமக்கும் தேவை.

இந்த நாட்டை கட்டியெழுப்ப, மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த, மக்களை வாழ வைக்க எங்களுக்கு முடியும்.

இவற்றை கருத்தில் கொண்டு, நான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, மக்கள் நலன் கருதி பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

உங்களுக்கு இந்த நாட்டை சரியான முறையில் ஆட்சிசெய்ய முடியாவிட்டால், நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கமுடியாவிட்டால், உங்களால் உருவான பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடிய விட்டால், அதனை ஏற்றுக்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் சந்தர்ப்பத்தை எங்களுக்கு தாருங்கள் என இந்த அரசாங்கத்திடம் தெளிவாக ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...