al
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை !

Share

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (06) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை பின்வரும் செயற்பாடுகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகளுக்காக நடத்தப்படும் தனியார் மேலதிக வகுப்புகள் (Tuition Classes).

பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள். மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல். பரீட்சை வினாக்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல்.

எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை.

நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

 

 

 

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...