67
செய்திகள்அரசியல்இலங்கை

A-30 கொரோனா திரிபு இலங்கைக்குள் நுழையும் அபாயம்!!!

Share

கொரோனா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A-30 வகை புதிய வைரஸ் பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் உண்டு என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா திரிபுகளும் குறுகிய காலத்துக்குள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றைப் போலவே இந்த மாறுபாடு வைரஸ் பிறழ்வும் நாட்டினுள் எந்த நேரத்திலும் கண்டறியக் கூடும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாறுபாடு நாட்டுக்குள் நுழைந்து பரவத் தொடங்கினால், நிச்சயமாக ஒரு பேரழிவு சூழ்நிலை ஏற்படும்.

எனவே, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், புதிய திரிபுகளை தள்ளி வைத்திருப்பதே எமக்கு ஒரே வழி என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய கொரோனா வைரஸ் திரிபு தொடர்பில் இலங்கை எச்சரிக்கையுடன் இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...