OIF 3
இந்தியாசெய்திகள்

கால்வாயில் சடலமாக கிடந்த 27 வயது பெண் மாடல்!

Share

இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், திவ்யா அதை வீடியோவாக எடுத்து அபிஜீத்தை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி, ஹொட்டலில் வைத்து திவ்யா கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் தோஹானாவில் உள்ள பக்ரா கால்வாயில் திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

குர்கான் பொலிஸார் கூறும்போது, பஞ்சாபின் மூனாக் பகுதியில் உள்ள கால்வாயில் திவ்யாவின் சடலம் வீசப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், Hisarயில் உள்ள குருத்வாரா சாலையில் வசிக்கும் ரவி ரங்கா, பால்ராஜ் கில் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

அத்துடன் அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான ரவி பங்கா தலைமறைவானார். அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...