OIF 3
இந்தியாசெய்திகள்

கால்வாயில் சடலமாக கிடந்த 27 வயது பெண் மாடல்!

Share

இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், திவ்யா அதை வீடியோவாக எடுத்து அபிஜீத்தை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி, ஹொட்டலில் வைத்து திவ்யா கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் தோஹானாவில் உள்ள பக்ரா கால்வாயில் திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

குர்கான் பொலிஸார் கூறும்போது, பஞ்சாபின் மூனாக் பகுதியில் உள்ள கால்வாயில் திவ்யாவின் சடலம் வீசப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், Hisarயில் உள்ள குருத்வாரா சாலையில் வசிக்கும் ரவி ரங்கா, பால்ராஜ் கில் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

அத்துடன் அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான ரவி பங்கா தலைமறைவானார். அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
articles2FiWcczBZ1YKHxsuJnfzhb
செய்திகள்இலங்கை

அனர்த்த நிவாரணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது!

சர்வதேச ஒற்றுமையின் குறியீடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு...

MediaFile 2
செய்திகள்இலங்கை

மஹியங்கனை வைத்தியசாலை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்: நாளை முதல் வெளிநோயாளர் சேவைகள் இயங்கும் – அனில் ஜாசிங்க!

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும்...

591547131 1415777287218214 8631467082026287584 n
செய்திகள்அரசியல்இலங்கை

பேரிடர் நிவாரணம்: இத்தாலியத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துக் கலந்துரையாடல்!

‘டித்வா’ சூறாவளிப் புயலால் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும்...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம்: வீடு சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூ. 25,000 ஆக உயர்வு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது, அவற்றைத் சுத்தம்...