இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவினை ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் மிகவும் விமர்சையாகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.
சுதந்திர தின இராணுவப் பேரணி மற்றும் ஏனைய கலை நிகழ்வுகளுக்கான விசேட ஒத்திகை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா திகதிகளை அறிவித்துள்ளார்:
தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். ஒத்திகை நடைபெறும் நாட்களிலும், பிரதான தினமான பெப்ரவரி 04 ஆம் திகதியும் குறிப்பிட்ட சில வீதிகள் மூடப்படலாம் அல்லது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.