பலாங்கொடை, நொன்பேரியல் இயற்கை வனத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த 6 பேரை நொன்பேரியல் வனப்பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர்.
இவ்வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழமையான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர்.
இவர்கள் உடனே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவ்வனத்தில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வுகள், காடழிப்பு, வேட்டையாடுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவதால் இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment