கைது
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அறுவர் மாட்டினர்!

Share

பலாங்கொடை, நொன்பேரியல் இயற்கை வனத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த 6 பேரை நொன்பேரியல் வனப்பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இவ்வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழமையான‌ பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இவர்கள் உடனே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வனத்தில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வுகள், காடழிப்பு, வேட்டையாடுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவதால் இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....