செய்திகள்இலங்கை

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

Share

Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) மட்டும் 54 கொரோனாத் (corona) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 9 பேரும், புதுக்குடியிருப்பில் 24 பேரும், முள்ளியவளையில் 6 பேரும், முல்லைத்தீவில் 3 பேரும்,மாங்குளம் பிரதேசத்தில் 5 பேரும் மல்லாவி பிரதேசத்தில் 7 பேரும் உட்பட 54 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று (24) புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வர்த்தகரான 47 அகவையுடைய சிவப்பிரகாசம் சிறிதரன் என்பவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...