image 4706d4bd61
செய்திகள்இலங்கை

500 மில்லிலீற்றர் தண்ணீர்போத்தல் 19ரூபாவிற்கு சதோசவில்!!

Share

500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 19 ரூபா செலவில் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

தற்போது 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், தண்ணீரைப் பயன்படுத்திய பின்னர் வெற்றுப் போத்தல் வீசப்படுகிறது.

இதனால் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது. எனவே, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, மீள் சுழற்ச்சி செய்யக் கூடிய புதிய போத்தல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் அறிமுக விலையாக 6 ரூபா கழிவு வழங்கப்படுகிறது. 29 ரூபாவிற்குப் பெற்றுக்கொள்ளும் தண்ணீர் போத்தல்களைப் பயன்படுத்திவிட்டு, போத்தல்களை சதொசவிடம் மீள ஒப்படைக்கப்படும் பட்சத்தில் 10 ரூபா பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே 19 ரூபாவிற்கு 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை ச.தொ.ச. விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவில் முழு அளவில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...