boatt
செய்திகள்உலகம்

நடுக்கடலில் படகு விபத்து – 52 பேர் மாயம்

Share

நடுக்கடலில் படகு விபத்து – 52 பேர் மாயம்

ஸ்பெயின் நாட்டின் கடற்பரப்புக்குள் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படகில் பயணித்த 52 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அகதிகள் 53 பேருடன் ஆபிரிக்க நாடான ஐவரிகோஷ்ட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியூடாக ஸ்பெயினை நோக்கி குறித்த படகு சென்றுள்ளது. இந்த படகு ஸ்பெயினின் நடுக்கடலில் ஹனரி தீவுக்கு அருகாமையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்து, அங்கு சென்ற மீட்புப் படையினரால் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்துக்கு உள்ளான படகின் உடைந்த பாகமொன்றைப் பிடித்தபடி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணே மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

படகில் பயணித்த மிகுதி 52 பேரும் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி மீட்புப் படையினரால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், படகு கவிழ்ந்து நீண்ட நேரம் ஆகியுள்ளதால் குறித்த 52 பெரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...