boatt
செய்திகள்உலகம்

நடுக்கடலில் படகு விபத்து – 52 பேர் மாயம்

Share

நடுக்கடலில் படகு விபத்து – 52 பேர் மாயம்

ஸ்பெயின் நாட்டின் கடற்பரப்புக்குள் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படகில் பயணித்த 52 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அகதிகள் 53 பேருடன் ஆபிரிக்க நாடான ஐவரிகோஷ்ட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியூடாக ஸ்பெயினை நோக்கி குறித்த படகு சென்றுள்ளது. இந்த படகு ஸ்பெயினின் நடுக்கடலில் ஹனரி தீவுக்கு அருகாமையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்து, அங்கு சென்ற மீட்புப் படையினரால் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்துக்கு உள்ளான படகின் உடைந்த பாகமொன்றைப் பிடித்தபடி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணே மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

படகில் பயணித்த மிகுதி 52 பேரும் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி மீட்புப் படையினரால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், படகு கவிழ்ந்து நீண்ட நேரம் ஆகியுள்ளதால் குறித்த 52 பெரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...