boatt
செய்திகள்உலகம்

நடுக்கடலில் படகு விபத்து – 52 பேர் மாயம்

Share

நடுக்கடலில் படகு விபத்து – 52 பேர் மாயம்

ஸ்பெயின் நாட்டின் கடற்பரப்புக்குள் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படகில் பயணித்த 52 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அகதிகள் 53 பேருடன் ஆபிரிக்க நாடான ஐவரிகோஷ்ட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியூடாக ஸ்பெயினை நோக்கி குறித்த படகு சென்றுள்ளது. இந்த படகு ஸ்பெயினின் நடுக்கடலில் ஹனரி தீவுக்கு அருகாமையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்து, அங்கு சென்ற மீட்புப் படையினரால் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்துக்கு உள்ளான படகின் உடைந்த பாகமொன்றைப் பிடித்தபடி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணே மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

படகில் பயணித்த மிகுதி 52 பேரும் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி மீட்புப் படையினரால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், படகு கவிழ்ந்து நீண்ட நேரம் ஆகியுள்ளதால் குறித்த 52 பெரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...