இந்தியா – ஆந்திர மாநிலத்தின் திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியை சேர்ந்தவர் ஒருவரின் 3 ஆயிரம் வாத்துக்கள் ஒரேதடவையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் 3 ஆயிரம் வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
ஏரியில் இருந்த தண்ணீரை குடித்த 3 ஆயிரம் வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.
ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்ததாலேயே வாத்துக்கள் இறந்தமை தெரிய வந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#India
Leave a comment